வட சபரிமலை ஐயப்பன் தரிசனம் 🕉️ Vada Sabarimalai Iyappan Temple Today!

Published at : 23 Dec 2025

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலின் சரியான பிரதியாக கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் அயப்பன் உச்சியில் இருப்பதைப் போல் இங்கேயும் ஒரு மலையின் உச்சியில் இருப்பதற்கான உணர்வைக் கொடுப்பதற்காக இந்த கோயில் மூன்று தளங்களில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடக்கலை கேரள பாணியையும் பாரம்பரியத்தையும் பிரதான சன்னதி மற்றும் கருவறைக்கு 18 படிகள் போன்ற முறைகளைப் பின்பற்றுகிறது. இந்த கோயில் வட சபரி அல்லது வடக்கு சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டு முறைகள் சபரிமலை கோயிலுக்கு ஒத்தவையாக உள்ளன. இதன் மூலம் பக்தர்கள் அனைத்து விரதங்களையும் கடைப்பிடித்து, இருமுடியை எடுத்துச் சென்று, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்வதைப் போல சரண முழக்கங்கள் மற்றும் பக்திப்பாடல்களைப் பாடுகிறார்கள். இருமுடி இல்லாமல் கோயிலுக்கு வரும் மற்ற பக்தர்களுக்கு தனியான பாதை உள்ளது. கன்னிமூல மகா கணபதி, மாலிகாபுரத்து அம்மன், நாகராஜா மற்றும் பிற பரிவார தேவதைகள் ஆகியோரின் துணை ஆலயங்களுடன் சபரிமலையின் அனைத்து அம்சங்களும் இந்த கோவிலிலும் உள்ளன.கோயிலின் கொடிமரம் என்பது ஒற்றைத் துண்டு 40 அடி உயரம் கொண்டது. கோயிலுக்கு கீழே 125 அடி 100 அடி உயரமுள்ள ஒரு தியான மண்டபம், மண்டல பூஜை மற்றும் முக்கிய திருவிழாவின் போது பக்தகர்கள் தங்க வைக்கப்படுகிறது. இம்மண்டபம் ஜெய்ப்பூர் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. இங்கு 1,500 பக்தர்களை தங்க வைக்கும் வசதி உள்ளது.திருவிழா மற்றும் பிற முக்கிய நாட்களில் இசை நிகழ்ச்சிகள், மத சொற்பொழிவுகள் மற்றும் பிற நிகழ்வுகள் இம்மண்டபத்தில் நடைபெறும். திருவிழா நாட்களில் சுவாமியினை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தங்க மற்றும் வெள்ளி இரதங்களும் இந்த கோவிலில் உள்ளன.
இக்கோவிலில் விழாக்காலங்களில் திருஉலா எடுத்துச்செல்ல ஒரு தங்க ரதமும் ஒரு வெள்ளி ரதமும் உள்ளன.
கோயிலில் உள்ள பூஜைகள் சபரிமலையில் உள்ள விதிகளின்படி செய்யப்படுகின்றன, வித்தியாசம் என்னவென்றால், சபரிமலை கோயில் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறந்திருக்கும், அதே சமயம் ராஜா அண்ணாமலைபுரம் கோயில் பக்தர்களுக்காக ஆண்டு முழுவதும் பகல் வேளையில் திறக்கப்பட்டுள்ளது.